Tuesday, October 9, 2012

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்
திருநாகேச்வரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. பத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்க பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் வந்தவுடன் தவிப்பதை விட தவிர்ப்பது மேல். விட்டு விட்டு காய்ச்சல் வந்தால் அலட்சியப் படுத்தாமல் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்போதே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.             அலட்சியம் வேண்டாம்.

செய்ய வேண்டியது.
௧. மழைநீர் தேங்காத சுற்றுபுறம்.
௨. கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு.

௩. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகுதல்.