Saturday, November 14, 2009

ஒரு பார்வை ஒரு புன்னகை ஒரு வார்த்தை

திசையின்றி அலைந்தஎன்
சிந்தனைகளை சீற்படுத்தியதுன்
ஒரே பார்வை...

வெடிப்புற்று இருந்த என்
மனதில் நீர் ஊற்றியதுன்
ஒரே புன்னகை

ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு
அடிமையாக்கியது உன்
ஒரே வார்த்தை...

கடந்த காலமும் காதலும்

இன்னமும் இருக்கிறது
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.

சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.

மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...

தொலைபேசி

இடம், பொருள், ஏவல்
எதுவுமே தெரியாமல்,
அழைத்ததேனோ,
இனிய தொலைபேசியே..

விழலுக்கு இறைத்த நீர்

வற்றிப்ப் போயின என்
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...

மைவிழி

உன் மைவிழி வழி

என் மெய் நோக்கும் போது

என் கைப்பட்ட காகிதம்

கவிதையானது...

thamarai

நிலத்தாமரை உன் அழகில்
என் மனத்தடாகத்தில்
அவள் முகத்தாமரை.