
மருந்துகளில் கூட போலிகள் என்னும்போது யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று பாடத்தோன்றுகிறது. பேதைகளாக இருக்கும் வரையில் இப்படியே இருக்க வேண்டியதுதான். உடல்நலம் சரியில்லா விட்டால் எதையாவது விற்றாவது மருத்துவரைப் பார்த்து மருந்துகள் வாங்கி உடல் நலனை பேண விரும்புவார்கள். இந்நிலையில் போலி மருத்துவர்களும் போலி மருந்துகளும் மக்கள் உயிருக்கு ஆப்பு வைப்பது என்பது தொடரும் நிலையில் மக்கள் மருத்துவத்துறையின் மீது நம்பிக்கை வைப்பது குறைந்துவிடும். உடனடியாக செய்ய வேண்டியன:
* மார்வாடிகளின் ஆதிக்கத்தை குறைப்பது.
* ஆர். ஐ.எம். பி. போலி மருத்துவர்களை கைது செய்வது.
* நடைமுறை சாத்தியமில்லாத பழைய சட்டங்களை வீசிவிட்டு புது சட்டங்களை உருவாக்கி கடுமையாக நடைமுறை படுத்துவது.
* உண்மையாகவே மக்களின் நலனின் மீது அக்கறை செலுத்துவது.
* மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற நிலைமையை உருவாக்குவது.
இதை செய்தாலே இது போன்ற பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

No comments:
Post a Comment